கத்தார் நாட்டில் புதிய சட்டம்: வீட்டு வேலை பெண்களுக்கு வார விடுமுÛ3-ந் தேதிக்குள் சம்பளம் தரப்பட வேண்டும்
Read Time:1 Minute, 17 Second
கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இந்தியா உள்பட பல நாடுகளைச் சேர்ந்த பெண்கள் ஏராளமானோர், வீட்டு வேலை செய்து வருகிறார்கள். இப்பெண்கள் மோசமாக நடத்தப்படுவதாக அடிக்கடி புகார் வருகிறது. இதையடுத்து, வீட்டு வேலை செய்யும் பெண்கள் நலனுக்காக கத்தார் நாடு புதிய சட்டம் இயற்றி உள்ளது. இதன்படி, இப்பெண்களுக்கு ஆண்டுக்கு 21 நாட்கள் விடுமுறை விடப்பட வேண்டும், வாரந்தோறும் ஒரு நாள், சம்பளத்துடன் கூடிய விடுமுறை விட வேண்டும், மாத சம்பளத்தை, மாதந்தோறும் 3-ந் தேதிக்குள் தந்து விட வேண்டும். இச்சட்டத்தை மீறும் வீட்டு உரிமையாளர்களுக்கு சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். இந்த வரைவு சட்டம், கத்தார் மன்னரின் இறுதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் ஒப்புதல் அளித்த பிறகு, இது அமலுக்கு வரும்.
Average Rating