சீனாவில் பூகம்பம் தாக்கிய போது பள்ளி குழந்தைகளை காப்பாற்றாமல் ஓடிய ஆசிரியர் டிஸ்மிஸ்

Read Time:1 Minute, 5 Second

சீனாவில் கடந்த மாதம் ஏற்பட்ட பூகம்பத்தில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். சிச்சுவான் மாகாணம் துஜியாங்யன் நகரில் பூகம்பம் தாக்கியபோது அங்குள்ள ஒரு தனியார் உயர்நிலைப் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த சீன மொழி ஆசிரியர் பேன் மீசோங், மாணவர்களை பற்றி கவலைப்படாமல் வெளியே ஓடினார். அவர்தான் முதல் நபராக, கால்பந்து மைதானத்தில் தஞ்சம் அடைந்தார். பூகம்பத்தில் அவரது மாணவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. இருப்பினும் அவரது செயலுக்கு சீனா முழுவதும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து, அந்த ஆசிரியரை பள்ளி நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது. இதை எதிர்த்து வழக்கு தொடர போவதாக பேன் மீசோங் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கனடாவில் புலிகளின் வங்கிக்கணக்கில் 120 கோடி டொலர்கள்
Next post கத்தார் நாட்டில் புதிய சட்டம்: வீட்டு வேலை பெண்களுக்கு வார விடுமுÛ3-ந் தேதிக்குள் சம்பளம் தரப்பட வேண்டும்