புளொட் இயக்கத்தின் ஓழுக்காற்று நடவடிக்கைகளுக்கு முகம் கொடுக்க மறுத்து தலைமறைவாக வாழ்ந்தவர் ஆச்சிராஜன்! பணத்திற்காக எதையும் செய்வேன் -கூறுகிறார் ரிபிசி ராமராஜன்..

Read Time:2 Minute, 14 Second

புளொட் இயக்கத்தின் உறுப்பினராக இருந்த ஆச்சிராஜன் என்பவர் பணத்திற்காக அந்நிய சக்திகளுக்கு சோரம் போய் எம்மியக்கத்தின் செயலதிபர் தோழர் உமாமகேஸ்வரன் அவர்களின் கொலைச் சதிமுயற்சிளை முன்னின்று நடாத்தி எம்மியக்கத்திற்கு துரோகங்களை இழைத்து பெரும் தொகைப் பணத்தை சம்பாதித்துக் கொண்ட துரோகியாவார். தோழர் உமா மகேஸ்வரனின் கொலை விசாரணைகளில் இவரது துரோகங்கள் வெளிவந்த போது புளொட் இயக்கத்தினரால் மேற்கொள்ளப்பட இருந்த ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு பயந்து இத்தனை காலமும் தலைமறைவாக வாழ்ந்த ஆச்சிராஜன் இயற்கை மரணமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இவரது மரண அறிவித்தலை வானலைகளில் கொண்டு வந்த லண்டன் தமிழ் வானொலி ஆச்சி ராஜனை புளொட் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர் என வகைப்படுத்தியிருந்தமையை ஆட்சேபித்த புளொட் சர்வதேச ஒன்றியத்தினராகிய நாம் அதன் பணிப்பாளர் ராமராஜன் அவர்களை தொடர்பு கொண்டு எமது அதிருப்தியை தெரிவித்த போது அங்கு குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் யாவும் பணம் செலுத்தப்பட்ட விளம்பரம் எனவும் தான் பணத்திற்காக எந்த விடயங்களையும் வானொலியில் கொண்டு வர தயாராக இருப்பதாக கூறியதையிட்டு அதிர்ச்சி அடைந்துள்ளோம். எனவே யார் இந்த ஆச்சிராஜன்? என தெரியப்படுத்தும் புளொட் சர்வதேச ஒன்றியத்தினராகிய நாம் ரிபிசி வானொலியின் தகவல்களில் அவதானமாக இருக்குமாறு மக்களை பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம். –புளொட் சர்வதேச ஒன்றியம்!!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீண்ட நாட்களுக்கு பின் தொலைக்காட்சியில் தோன்றிய கியூப முன்னாள் தலைவர் காஸ்ட்ரோ
Next post சட்டவிரோதமாக பொருட்கள் ஏற்றுமதி: இந்திய தொழில் அதிபருக்கு 35 மாதம் ஜெயில்; ரூ.24 லட்சம் அபராதம், அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு