ஈராக் குண்டுவெடிப்பு: 51 பேர் பலி

Read Time:1 Minute, 31 Second

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கார் குண்டு வெடித்ததில் 51 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த 3 மாதங்களில் பாக்தாத்தில் நடத்தப்பட்டுள்ள மிக மோசமான தாக்குதல் ஆகும் இது. பாக்தாத்தில் நேற்று பரபரப்பு மிகுந்த சாலை ஒன்றில் கார் குண்டு வெடித்தது. இதை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீப்பிடித்தது. இந்த தாக்குதலில் 51 பேர் உயிரிழந்ததாகவும், 75 பேர் படுகாயமடைந்ததாகவும் ஈராக் உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். ராணுவம் மற்றும் போலீசார் தங்களை பாதுகாக்க தவறியதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த மார்ச் மாதம் 6ந் தேதி பாக்தாத்தில் நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலில் 68 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சட்டவிரோதமாக பொருட்கள் ஏற்றுமதி: இந்திய தொழில் அதிபருக்கு 35 மாதம் ஜெயில்; ரூ.24 லட்சம் அபராதம், அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு
Next post அணி மாற்றம்: பாமக கடந்த வந்த பாதை