ஒரே கேள்வியில் ஒட்டுமொத்த ஆண்களையும் அழ வைத்த இளம்பெண்!… கேள்வி என்ன?..!!
முந்தைய காலத்தில் பெண் பிள்ளைகள் பிறந்தாலே கள்ளிப் பால் ஊற்றி கொலை செய்வதை நாம் அதிகமாகவே கேள்விப் பட்டிருப்போம்.
ஆனால் தற்போது பெண் பிள்ளை தான் வேண்டும் என ஆண்கள் கேட்கிறார்கள்… குழந்தை முதல் அவள் பாரும் அடையும் வரை பார்த்து பார்த்து வளர்த்து வரும் காலம் மாறிவிட்டது. வீட்டுக்கு வீடு ஆண்குழந்தைகளின் சத்தம் இருக்கிறதோ என்னவோ பெண் குழந்தைகளின் சத்தம் இருக்கத் தான் செய்கிறது.
கிராமங்களிலும் நகரங்களிலும் இப்பொழுது அனைத்து பெண்களும் முன்னேற தொடங்கிவிட்டனர். ஆண்களுக்கு நிகராக அனைத்து பெண்களும் பல துறைகளில் பணியாற்றவும் தொடக்கிவிட்டனர். இவைகள் எல்லாம் ஒரு புறம் இருந்தாலும் பெண்களின் மீதான பாலியல் தொல்லைகளும் அதிகரிக்க தொடக்கிவிட்டன.
பெண்கள் இப்பொழுது பொதுவீதியில் செல்வது மிகவும் சிரமமாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இரவு நேரங்களில் அவர்கள் வெளியில் செல்வது சிரமமோ சிரமம். இப்படி பயந்து பயந்து செல்பவர்களிடமும் கயவர்கள் தன் வேலையை காட்டி விடுகின்றனர்இ
ப்படி ஏதும் அறியாமல் டெல்லியில் உள்ள முக்கியமான பகுதியில் வசிக்கும் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட பெண் ஒருவர் கேட்கும் கேள்வி எந்த ஆணையும் அழ வைக்கும்.
தான் பிறந்ததில் இருந்து எதுவும் அறியாமல் தன்னை வளர்த்த அப்பா அம்மாவிற்காக வேலைக்கு சென்ற பெண்ணை கடத்தி தனது ஆசைக்கு இரையாக்கிய ஆண்களை மட்டுமல்லாமல் அனைத்து ஆண்களையும் நோக்கி அவர் எழுப்பிய கேள்வி ஆண்களை முகம் சுளிக்க வைக்கிறது.
அப்படி என்ன கேள்வி என்ற எண்ணம் ஆண்களுக்கு தோன்றலாம் . அந்த பெண் கெட்டதாவது
ஆண்களே! நீங்கள் நல்லவரோ? கேட்டவரோ? அது எனக்கு தெரியாது, நீங்கள் படித்தவரோ? படிப்பறிவற்றவரோ? அது எனக்கு தெரியாது. ஆனால் நீங்களும் ஒரு மனிதன் தானே உங்களையும் பெற்றவர் ஒரு பெண் தானே ஒரு பெண்ணை அவள் அனுமதியின்றி தொடும்போது உன் அம்மா உன்னை பெற்றெடுத்த போது வருகின்ற வலி தானே எனக்கும் வரும் அப்படி என்ன உனக்கு அந்த 5 நிமிட இச்சை சுகத்தை தந்துவிட போகிறது? என கேட்டுள்ளார்.
இது ஆணாகிய அனைவருக்கும் செருப்படி கேள்வி! இப்படி ஒரு கேள்வியை கண்டபின் எந்த ஆணும் இனி பெண்களை தொந்தரவு செய்ய மாட்டான் என நம்புவோம்
Average Rating