கனடா நாட்டு கடற்கரையில் ஒதுங்கும் கால்கள்

Read Time:1 Minute, 30 Second

கனடா நாட்டு கடற்கரையில் கடந்த ஓராண்டில் ஆறாவது முறையாக மனித கால் ஒன்று ஒதுங்கியிருப்பது மர்மத்தை உண்டாக்கி உள்ளது. கனடா நாட்டில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் கடந்த ஓராண்டுக்கும் முன்பாக கடற்கரையில் மனித கால் ஒன்று ஒதுங்கியது. இந்த கால் யாருடையது? என்பது தெரியாமல் குழப்பமாக இருந்தது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சில நாட்களிலேயே இரண்டாவதாக வலது கால் ஒன்று கரையில் ஒதுங்கியது. அதன் பிறகு பிப்ரவரி மாதம் மற்றொரு தீவு அருகே ஒரு வலது கால் ஒதுங்கியது. பின்னர் மே 22ந் தேதி கிர்கலாண்டு தீவில் மனித கால் ஒன்று ஒதுங்கியது. இதே இடத்தில் மற்றொரு மனித காலும் ஒதுங்கியது. இந்நிலையில் ஆறாவதாக ஒரு மனித கால் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இப்படி அடுத்தடுத்து கால்கள் ஒதுங்குவது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின்னே உள்ள மர்மத்தை விடுவிக்க முடியாமல் கனடா புலனாய்வுத் துறையினர் திணறி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரசுக்கு சொந்தமான 8 வாகனங்கள் – கம்ப்ïட்டர்களை திரும்ப ஒப்படையுங்கள்: முன்னாள் மன்னருக்கு நேபாள அரசு உத்தரவு
Next post ஈராக்கில் கார் குண்டு வெடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்தது