ஈராக்கில் கார் குண்டு வெடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்தது
Read Time:57 Second
ஈராக்கில் தலைநகர் பாக்தாத்தில் மார்க்கெட் பகுதியில் கார்குண்டு வெடித்தது. காரில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த குண்டு வெடித்ததில் கடந்த செவ்வாய்க்கிழமை 51 பேர் பலியானார்கள். இது நேற்று 63 ஆக உயர்ந்தது. பலியானவர்களில் 4 பேர் சிறுவர்கள். 5 பேர் பெண்கள். 75 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்துக்கு ஷியா முஸ்லிம் தீவிரவாதிகள் தான் காரணம் என்று அமெரிக்க ராணுவம் குற்றஞ்சாட்டி உள்ளது. சன்னி அரேபியர்களுக்கு எதிராக ஷியா முஸ்லிம்களை தூண்டி விடுவதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் கூறிஉள்ளது.
Average Rating