காதல் வாழ்க்கைக்கு அவசியமானது: திரிஷா..!!

Read Time:2 Minute, 42 Second

திரிஷா சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் ஆகிறது. 2002-ல் மவுனம் பேசியதே படத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இதுவரை 65 படங்களில் நடித்து விட்டார். கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், தனுஷ், அக்‌ஷய்குமார் என்று முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து இருக்கிறார்.

மேலும் அரை டஜன் படங்கள் அவர் கைவசம் உள்ளன. நடிக்க வந்து 15 வருடங்கள் ஆனதை தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து திரிஷா கலந்துரையாடினார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- சினிமாவில் 15 ஆண்டுகள் நீடிப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:- இத்தனை வருடங்கள் சினிமாவில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கும் வாய்ப்பளித்த டைரக்டர்களுக்கும், நல்ல கதைகள் தந்த கதாசிரியர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். சினிமாவில் நாம் நினைத்தது எல்லாம் நடப்பது இல்லை. அப்படி நடக்காமல் இருப்பதும் நம் நல்லதுக்குத்தான் என்று எடுத்துக்கொண்டால் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

கேள்வி:- உங்களை மிகவும் பயமுறுத்திய விஷயம் எது?

பதில்:- உயிரோடு இருக்கும்போதே புதைப்பது என்னை பயமுறுத்துகிறது. நமக்கு அப்படி நடக்காது என்று ஆறுதல் சொல்லிக்கொண்டாலும் அவ்வப்போது அப்படிப்பட்ட எண்ணங்கள் எனக்குள் தோன்றி பயப்பட வைக்கிறது.

கேள்வி:- உங்கள் பார்வையில் காதல் பற்றி?

பதில்:- காதல், வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது. காதல் என்றாலே ஒரு ‘மேஜிக்’தான்.

கேள்வி:- உங்கள் பலம் என்ன?

பதில்:- என்னுடைய அறிவும், உடற்பயிற்சி. யோகாவும் எனக்கு பலமாக இருக்கிறது.

கேள்வி:- புதிதாக நடிக்க வரும் கதாநாயகிகளுக்கு உங்கள் ஆலோசனைகள் என்ன?

பதில்:- கடினமாக உழைக்க வேண்டும். உங்களை நீங்களே நம்ப வேண்டும். அடுத்தவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாயின் சாம்பலை உணவாக சாப்பிடும் மகள்… கலங்க வைக்கும் காரணம்..!!
Next post சர்வகட்சிக் கூட்டத்துக்கான அழைப்பு..!! (கட்டுரை)