புலிகளின் புலனாய்வுத்துறை கிழக்குத் தலைவர் சுட்டுக் கொலை!!

Read Time:1 Minute, 15 Second

எல்.ரீ.ரீ.ஈ. புலனாய்வுத்துறையின் திருகோணமலை தென் பிரதேசத்துக்கான தலைவர் சௌந்தராஜன் அல்லது தங்கம் இன்று காலை படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இப்பிரதேசத்தில் படையினர் நடத்திய சுற்றிவளைப்பின்போது பஹல தோப்பூர் என்ற இடத்தில் இருந்து 2 கிலோ மீற்றர் வடக்கே உள்ள மணற்சேனை என்ற இடத்தில் இன்று காலை 9.30 மணியளவில் இவர் கொல்லப்பட்டுள்ளார். ஒரு மைக்ரோ பிஸ்டல், 3 மெகஸின்கள், ஒரு பிஸ்டல் கவர் என்பவற்றை படையினர் இவரிடமிருந்து கைப்பற்றியுள்ளனர். கிழக்கில் மக்களின் இயல்பு வாழ்க்கையை குழப்பியடிப்பதற்கான புலிகளால் கிழக்கு மாகாணத்துக்கு அண்மையில் அனுப்பிவைக்கப்பட்ட குழுவுக்கு இவரே தலைமை வகித்தார் என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் 33பேர் இத்தாலியில் கைது
Next post மாகாணசபை கலைக்கப்பட்டடையை ஆட்சேபித்து உயர் நீதிமன்றத்தில் ஜே.வி.பி மனு