பிளாஸ்டிக் பாட்டில் பயன்பாட்டால் ஆபத்து..!!

Read Time:4 Minute, 44 Second

நாகரிகம் என்ற பெயரில் அளவுக்கு அதிகமாகவும், அடிக்கடி பயன்படுத்தப்படும் பொருளாகவும் பிளாஸ்டிக் பாட்டில் கலாசாரம் இப்போது பரவிவிட்டது. இந்த பிளாஸ்டிக் பாட்டில் மனிதர்களின் உடல்நலம், மற்ற உயிரினங்களின் உடல்நலம், சுற்றுச்சூழல் போன்றவற்றை கடுமையாக பாதிக்கிறது. இன்று பிளாஸ்டிக் என்பது ஒட்டு மொத்த உலகத்துக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது.

இதை உணர்ந்து கொள்ளாமல் பெரும்பாலானோர் தண்ணீர் கொண்டு செல்வதற்கு மட்டும் இல்லாமல், சூடான பானங்களான டீ, காபி, பால் ஆகியவற்றை பல மணி நேரம் வைத்திருப்பதற்கும் பிளாஸ்டிக் பொருட்களையே பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டு உள்ளனர். மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பாட்டில் உபயோகிப்பதை முடிந்தவரை தவிர்ப்பதே நல்லது.

வெந்நீர், சூடான சாம்பார், டீ, காபி போன்றவற்றை பிளாஸ்டிக் கவர்களிலோ, பாட்டில்களிலோ, மற்ற பிளாஸ்டிக் பொருட்களிலோ கண்டிப்பாக எடுத்துச் செல்லக்கூடாது. அவ்வாறு செய்வதால், அதிக சூடு காரணமாக அதில் உள்ள வேதிப்பொருளான மீத்தேன் அமிலம் வெளிப்பட ஆரம்பிக்கும். இது நம் உடல் நலத்துக்கு மிகவும் தீங்கை ஏற்படுத்தக்கூடியது. முக்கியமாக புற்றுநோய், ஹார்மோன் குறைபாடு, எலும்புகளை பலமிழக்கச் செய்தல், ரத்த அணுக்கள் குறைதல் போன்ற பாதிப்புகள் ஒவ்வொன்றாக உடலில் தோன்ற ஆரம்பிக்கும்.

பிளாஸ்டிக் பாட்டில், பிளாஸ்டிக் கவர் போன்றவற்றின் பயன்பாட்டால் நம்முடைய உடலில் தோன்றும் பலவிதமான பாதிப்புகளின் அறிகுறிகள் உடனே தெரிவதில்லை. மெல்லமெல்லத்தான் வெளியே தெரிய ஆரம்பிக்கும். வயிற்று வலி, வாந்தி, பசி இல்லாமை ஆகியவை இதில் முக்கியமான அறிகுறிகளாகும். இவை தவிர, அடிக்கடி பிளாஸ்டிக் பாட்டில் உபயோகிப்பவர்களுக்கு உடல் எடை குறைய ஆரம்பிக்கும். ரத்தச் சோகை உண்டாகும். நாம் உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களால் நாய், பூனை ஆகிய வளர்ப்பு பிராணிகளும் பாதிப்பு அடைய வாய்ப்பு உள்ளது.

இந்த பொருட்களை நாம் தவறுதலாகவோ, கவனக்குறைவாக வைக்கும்போது, அவற்றை இந்த விலங்குகள் விழுங்கும் அபாயமும் உள்ளது. இதன் காரணமாக அவை உயிரிழக்கும் நிலையும் ஏற்படலாம். பிளாஸ்டிக் பாட்டில், பிளாஸ்டிக் பாக்ஸ் ஆகியவற்றை உபயோகிப்பதால் நமக்கு ஏற்படுகிற வயிறு தொடர்பான உபாதைகளை தடுப்பதற்கு முதலில் அவற்றை பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். மேலும், பாட்டிலின் அடிப்பகுதி, வாய்ப்பகுதி, மூடியின் உட்புறம் ஆகியவற்றை வாரத்துக்கு ஒரு தடவையாவது கழுவ வேண்டும்.

அதன் பின்னரும் உடலில் பிரச்சினைகள் வரத் தொடங்கினால் ஆரம்ப நிலையிலேயே அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். அதாவது, என்ன மாதிரியான பிரச்சினை, எந்த அளவிற்கு உடலை பாதித்துள்ளது என்பதற்கு ஏற்றவாறு, சிகிச்சை செய்து கொள்வது நல்லது. உதாரணத்துக்கு, வயிற்று வலி, வாந்தி ஆகிய பிரச்சினைகள் என்றால், பொதுநல மருத்துவரிடமும், ரத்தச் சோகை என்றால், ரத்த இயல் மருத்துவரிடமும் சிகிச்சை பெறலாம். பெட் பாட்டிலுக்கு பதிலாக காப்பர் பாட்டில், எவர்சில்வர் பிளாஸ்க் போன்றவற்றைப் பயன்படுத்துவது நல்ல வழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிக்பாஸிற்கும், பிரபல ரிவிக்கும் ஏற்பட்ட மோதல்… கைமாறுகிறதா பிக்பாஸ் சீசன் 2?..!!
Next post என்னடா டிரஸ் இது இப்படி பொண்ணுங்கள மெர்சலாக்கிட்டியே..!! (வீடியோ)