ராதிகாவுக்கு கட்சிப் பதவி கிடையாது: சரத்குமார் திட்டவட்டம்
ராதிகாவுக்கு கட்சிப் பதவி கிடையாது என்றார் அவருடைய கணவரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார். புதுக்கோட்டையில் புதன்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது: “புதுகை மக்களவைத் தொகுதி நீக்கம் பிரச்னையில் முதல்வர் கருணாநிதியின் அசாத்திய மெüனம் ஆச்சரியமளிக்கிறது. இத்தொகுதியை மீட்கும் பிரச்னையை சமக கையிலெடுக்கும். இத்தொகுதியை மீட்க ரத்தம் சிந்தவும் நான் தயாராக இருக்கிறேன். ராதிகாவுக்குப் பதவி கிடையாது: சமகவில் குடும்ப அரசியல் இருக்காது. ராதிகா பிரசாரத்தில் தேவையென்றால் உதவுவார். ஒருபோது கட்சிப் பொறுப்புக்கு வர மாட்டார். உள்கட்சி ஜனநாயகத்துக்கு சமக முக்கியத்துவம் அளிக்கும். சமக ஆட்சிக்கு வந்தால் மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படுவோர் இரு முறைக்கு மேல் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட மாட்டார்கள். மக்களுக்குத் திருப்தி இல்லையென்றால் மக்கள் பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் உரிமை மக்களுக்கு அளிக்கப்படும்” என்றார் சரத்குமார்.
Average Rating