ஆப்கானிஸ்தானில் குண்டு வெடித்து 4 பிரிட்டிஷ் வீரர்கள் பலி
Read Time:49 Second
ஆப்கானிஸ்தான் தெற்கு பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் 4 பேர் இறந்தனர். அவர்களில் ஒருவர் பெண். ஹெல்மான்ட் மாகாணத்தில் அவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தலிபான் அமைப்பினர் வைத்த குண்டு வெடித்து 4 பேர் இறந்தனர். அந்நாட்டில் அமெரிக்கப் படைகளுடன் பிரிட்டிஷ் படைகளும் இணைந்து 2001 முதல் பாதுகாப்புப் பணியில் உள்ளன. இதுவரை அங்கு நடந்த குண்டுவெடிப்புகளால் பிரிட்டனைச் சேர்ந்த 106 வீரர்கள் இறந்துள்ளனர்.
Average Rating