ஈராக் மீது போர் நடத்தியதற்கு பதிலாக அல்கொய்தாவை அழித்து இருக்கவேண்டும்: ஒபாமா சொல்கிறார்
Read Time:1 Minute, 20 Second
ஈராக் மீது தாக்குதல் நடத்தி போரை தொடங்கியதற்கு பதிலாக அல்கொய்தா, தலீபான் தீவிரவாதிகளை ஒழித்து இருக்கவேண்டும் என்று ஜனநாயகக்கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஒபாமா கூறிஇருக்கிறார். அவர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டு பேசுகையில், “தீவிரவாதிகளை ஒழிக்கத் தவறியதற்காக பாகிஸ்தானை பொறுப்பாளியாக்காமல் விட்டது, புஷ் மற்றும் குடியரசு கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ஜான் மெக்கைன் ஆகியோரின் மிகப்பெரிய தவறாகும்” என்று குறிப்பிட்டார். அல்கொய்தாவும் தலீபானும் பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்து கொண்டுதான் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். பாகிஸ்தான் தொடர்பான கொள்கைகளை சரி செய்யாதவரை ஆப்கானிஸ்தானில் நாம் நினைத்ததை சாதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
Average Rating