மெக்சிகோ: நெரிசலில் சிக்கி 10 பேர் பலி
Read Time:1 Minute, 3 Second
மெக்சிகோவில் இரவு நேர விடுதி ஒன்றில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். மெக்சிகோ நாட்டில் உள்ள இரவு நேர விடுதி ஒன்றில் சிறுவர்களுக்கு போதை மருந்து மற்றும் மதுபானம் விற்கப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் அங்கு சோதனை நடத்த சென்றனர். அப்போது விடுதியின் உரிமையாளர் அங்கிருந்த தங்களது வாடிக்கையாளர்களிடம் போலீசார் கைது செய்வதற்காக வந்துள்ளனர் என்று கூறியுள்ளார். உடனே அங்கிருந்த சுமார் ஆயிரம் பேர் பதறி அடித்து கொண்டு ஓட முயற்சித்தனர். இதில் 10 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்ததாக மெக்சிகோ காவல் துறை தலைவர் ஜோயல் ஆர்டிகா தெரிவித்துள்ளார்.
Average Rating