பிலிப்பைன்சில் கடும் சூறாவளி காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 12 பேர் பலி

Read Time:1 Minute, 40 Second

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடும் சூறாவளி காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிலிப்பைன்சில் உள்ள உபி நகரில் ரிசாவோ ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் சிக்கி 5 வீடுகள் அடித்து செல்லப்பட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதில் 10 பேர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்திருப்பதாகவும், 8 பேரை காணவில்லை என்றும் தெரிவித் துள்ள அவர், குடிசைப்பகுதி ஒன்றில் நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந் திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பிலிப்பைன்சில் மேலும் மழை நீடிக்கும் என்றும் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே இந்த சூறாவளி காரணமாக பிலிப்பைன்சில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நிதி திரட்டுவதற்காக நிர்வாணமாக நின்ற பெண்
Next post இத்தாலி நாட்டில் முன்னாள் காதலியை கடத்தி வீட்டு வேலை செய்ய வைத்தவர் கைது