கைப்பற்றிய பகுதிகளில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற்றால் பேச்சுவார்த்தை: புலிகள் நிபந்தனை

Read Time:2 Minute, 33 Second

LTTE.Ilanthiraiyan.1.gifஇலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நீடித்து வருகிறது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சம்பூர் பகுதியை ராணுவம் கைப்பற்றியது. வேறு சில பகுதி களையும் பிடிக்க முன்னேறி வரும் ராணுவத்தினர் மீது புலிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தைக்கு நார்வேகுழு முயற்சி செய்து வருகிறது. இந்த பேச்சு வார்த்தையில் கலந்து கொள்வது குறித்து விடுதலைப்புலிகளின் ராணுவ செய்தி தொடர்பாளர் ராசையா இளந்திரையன் கூறியதாவது:-

போர் நிறுத்த காலத்தில் இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தி ஆக்கிரமித்த தமிழர் பகுதிகளில் இருந்து வாபஸ் பெற வேண்டும். ராணுவம் வாபஸ் பெறாவிட்டால் எந்த பேச்சு வார்த்தையிலும் கலந்து கொள்ளப் போவதில்லை. 2002-ம் ஆண்டில் சர்வதேச அமைப்பின் ஒத்துழைப்புடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை பூரணமாக அமுல்படுத்தினால் மட்டுமே விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வார்கள். இவ்வாறு ராசையா இளந்திரையன் கூறினார்.

இலங்கையில் இந்திய தூதராக பணியாற்றிய வரித நிருபமாராஜ் இப்போது சீனாவுக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில்பகொழும்பு நகரில் இருந்து தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்படுவதும், தமிழர்கள் கைது செய்யப்படுவதும், ஏராளமான தமிழர்கள் காணாமல் போவதும் அதிகரித்து வருகிறது. இதை தடுத்து நிறுத்தத் கோரி வர்த்தக சங்கங்கள் சார்பில் கொழும்பு நகரில் வருகிற 19-ந்தேதி கடை அடைப்பு போராட்டம் நடக்கிறது. மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் எம்.பி. தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமெரிக்க தலைவர் ஜோர்ஜ் புஷ் சந்திப்பு!
Next post போப் ஆண்டவர் மன்னிப்பு கேட்கவேண்டும் முஸ்லிம்கள் கோரிக்கை