கற்பழித்த காமுகனுக்கு ஒற்றை வார்த்தையில்… பெண் தந்த அதிர்ச்சி வைத்தியம்..!! (வீடியோ)
அறிவியல் பார்வைக்கு பதில் ஆணவப் பார்வையும், இச்சை பார்வையும் இருக்கும் வரை இந்த சமுதாயத்தில் பெண்பாதுகாப்பு என்பது கானல் நீராக தான் இருக்கும்.பெண் என்பவள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறாள் என்று பிரஞ்சு தத்துவம் ஒன்று உள்ளது. உண்மையில் பெண் குழந்தையாகப் பிறந்தாலும், அவள் இந்தச் சமூகத்தில் பெண்ணாக வளர முடிவதில்லை.
இந்தச் சமூகம் அவளை வளர விடுவதில்லை. பெண் குழந்தை என்று தெரிந்துவிட்டால் அக்குழந்தையைக் கொன்றுவிடும் நிலைமை இப்போதும் உலகெங்கிலும் பரவலாக உள்ளது.ஒருவேளை அந்தப் பெண் குழந்தை, கொலையிலிருந்து தப்பித்து, பருவ வயதை அடைந்துவிட்டால், பலரின் கண்கள் அப்பெண்ணின் உடலைத் துளைக்கும்.
ஒரு தலை காதலால் ஆசிட் வீச்சு, ஆணவக்கொலைகள், வரதட்சணைக் கொடுமைகள், சட்டத்தில் ஆண்களுக்கு இணையான சமஉரிமை இல்லாமை என இப்படிப் பிறப்பு முதல் இறப்பு வரை இப்பூமியில் வாழ்வதற்கு தினம் தினம் ஒரு வேள்வித்தீயில் பெண்கள் எரிந்து கொண்டே இருக்கிறார்கள்.
பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவது பாலியல் ரீதியாகத்தான் என்று அனைத்து நாடுகளின் கணக்கெடுப்புகளின் முடிவுகளும் சொல்லுகின்றன.பெண்களை போதைப் பொருளாக நினைக்கும் மிருகத்தனமான மனிதர்களுக்கு கீழே உள்ள காட்சி ஒரு பாடமாக அமையும்.
Average Rating