பிலிப்பைன்ஸ் நாட்டில் சூறாவளி தாக்கியதை தொடர்ந்து கப்பல் கவிழ்ந்து 4 பேர் பலி
Read Time:1 Minute, 4 Second
பிலிப்பைன்ஸ் நாட்டில் சூறாவளி தாக்கியதை தொடர்ந்து கப்பல் ஒன்று கவிழ்ந்து விபத்துக் குள்ளானதில் 4 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கடற்கரையிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் நடுக்கடலில் 700 பயணிகளுடன் சென்ற அந்த கப்பல் மூழ்கியதாகவும், இதில் 4 பேரின் உடல்கள் பறிமுதல் செய்யப் பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. கப்பல் மூழ்க தொடங்கியவுடன் அதிலிருந்த பயணிகள் தப்பிக்க முயற்சித்ததாகவும், அவர்களை மீட்க ரப்பர் படகுகள் பயன்படுத்தப்பட்டி ருப்பதாகவும் உள்ளூர் மேயர் தெரிவித்திருக்கிறார். 195 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளி காரணமாக கப்பல் மூழ்க தொடங்கியதாக தெரிகிறது.
Average Rating