துருக்கியில் மினி பஸ் மீது ரயில் மோதல்: 11 பேர் பலி
Read Time:1 Minute, 9 Second
துருக்கியில் ரயில் தண்டவாளத்தின் குறுக்கே செல்லும் பாதையை கடக்க முயன்ற மினி பஸ் மீது சரக்கு ரயில் மோதியதில் 11 பேர் பலியாகினர். தென்கிழக்கு காஸியான்தெப் மாகாணத்தில் உர்தகி என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தச் சம்பவம் நடந்தது. தண்டவாளக் குறுக்குப் பாதையை நெருங்குவதற்கு முன்னதாக ரயில் டிரைவர் தொடர்ந்து ஒலி எழுப்பியுள்ளார். ஃப்ளாஷ் விளக்கையும் அணைத்து அணைத்து போட்டுள்ளார். இருப்பினும் இதையெல்லாம் சற்றும் கண்டுகொள்ளாமல் தண்டவாளத்தைக் கடப்பதிலேயே மினி பஸ் டிரைவர் குறியாக இருந்துள்ளார். இதனால் தண்டவாளத்தைக் கடக்கும் முன் மினி பஸ் மீது ரயில் மோதியதாக, துருக்கி ரயில்வேத் துறை தெரிவித்துள்ளது.
Average Rating