சோதியா படையணியின் அடுத்த தலைவி சரிதாவும் கொல்லப்பட்டார்

Read Time:1 Minute, 51 Second

அண்மைக்காலமாக புலிகள் இயக்கத்தின் முக்கிய பெண் புலிகள் படையணியாகிய சோதியா படையணியின் முன்னணி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதன் தற்போதைய தலைவி லெப்டினன்ட் கேணல் சரிதா அல்லது நிலானி அல்லது தர்மாவும் கடந்த 6 ஆம் திகதி இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அண்மையில் வெலிஓயா பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்காக இராணுவத்தினர் ஆரம்பித்திருந்த பாரிய தாக்குதல்கள் மேலும் தீவிரமடைந்திருக்கும் நிலையில், கடந்த 6 ஆம் திகதி வெலிஓயா எல்லைப் பிரதேசங்களுக்குள் ஊடுருவியுள்ள இராணுவத்தினருடன் புலிகள் இயக்கத்தினர் பெரும் மோதல்களில் ஈடுபட்டதாகவும் இந்தத் தாக்குதல்களை புலிகள் இயக்கத்தின் பலம்வாய்ந்த சோதியா பெண் புலிகள் படையணியும் மேற்கொண்டதாகவும் பாதுகாப்புத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி இராணுவ புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ள தகவல்களில் இராணுவத்தினருக்கும் சோதியா படையணி உட்பட புலிகளின் ஏனைய படையணிகளுக்குமிடையே கடந்த 6 ஆம் திகதி வெலிஓயா பிரதேசத்தின் எல்லைப்பகுதிக்குள் நடந்த மோதல்களில் சோதியா படையணித் தலைவி “சரிதா” கொல்லப்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளதாகக் கூறியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒருமாத காலத்தில் 9பேர் லெப்டினன்ட் கேணல், 14பேர் கப்டன், 51பேர் லெப்டினன்ட், 41பேர் இரண்டாம் லெப்டினன்ட் உட்பட 150 புலிகள் பலி!
Next post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…