கியூபா அரசில் பிளவு இல்லை:பிடல் காஸ்ட்ரோ
Read Time:1 Minute, 15 Second
கியூபா அரசில் பிளவு ஏற்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்களை அந்நாட்டு முன்னாள் அதிபரும், மூத்த தலைவருமான பிடல் காஸ்ட்ரோ மறுத்துள்ளார். பிடல் காஸ்ட்ரோ உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது சகோதரர் ருவல் காஸ்ட்ரோ அதிபராக பதவியேற்ற பின்னர் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளை தொடர்ந்து கியூபா கம்யூனிச கட்சியில் பிளவு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள பிடல் காஸ்ட்ரோ, எந்த கோஷ்டி அல்லது குழுவுக்கும் தாம் தலைமையேற்க விரும்பவில்லை என்றும், கட்சியிலும், ஆட்சியிலும் பிளவு எதுவும் இல்லை என்றும், காஸ்ட்ரோ கூறியுள்ளார். காஸ்ட்ரோவின் இந்த அறிக்கை, கியூபாவின் அரசு இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Average Rating