விக்ரம் பிரபு படத்தில் வித்தியாசமான வேடம் கிடைத்திருக்கிறது: ஹன்சிகா…!!
விக்ரம் பிரபுக்கு ஜோடியாக ‘துப்பாக்கி முனை’ படத்தில் நடிக்கும் ஹன்சிகா, இதுவரை நடிக்காத வித்தியாசமான வேடம் கிடைத்திருப்பதாக கூறியிருக்கிறார்.
பிரபு தேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘குலேபகாவலி’. இதில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். இப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வரும் 12ம் தேதி திரைக்கு வருகிறது.
இப்படத்தை அடுத்து அதர்வா முதன் முதலாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படத்தில் அவருடைய ஜோடியாக நடிக்க ஹன்சிகா ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இப்போது விக்ரம் பிரபுவுடன் ஜோடி சேர்கிறார்.
மணிரத்னம் உதவியாளராக இருந்த தினேஷ் செல்வராஜ் இயக்கும் இந்த படத்துக்கு ‘துப்பாக்கி முனை’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. கலைப்புலி தாணு தயாரிக்கும் இதில் நடிப்பது குறித்து கூறிய ஹன்சிகா…
“இந்த படத்தின் இயக்குனர் மும்பைக்கே வந்து என்னை சந்தித்து கதை சொன்னார். கதை மிகவும் பிடித்து இருந்தது. உடனே இதில் நடிக்கிறேன் என்று சொல்லி விட்டேன். இந்த படத்தில் எனக்கு இதுவரை நான் நடிக்காத வித்தியாசமான பாத்திரம் கிடைத்திருக்கிறது. விக்ரம் பிரபுவுடன் நடிப்பது மகிழ்ச்சி” என்றார்.
Average Rating