உங்கள் தலைவர் யார் என்பதை படத்தில் போடுங்கள்: புதிய கூட்டமைப்புக்கு சவால்…!!( வீடியோ)

Read Time:2 Minute, 55 Second

தங்களுடைய கட்சியின் பொதுச் செயலாளரின் படத்தைக் கூட போடுவதற்கு திராணியற்றவர்கள் மாற்றுத் தலைமை பற்றி பேசுகிறார்கள் என வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபையில் பண்டாரிக்குளம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் க.சுமந்திரனின் தேர்தல் அலுவலகத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் குறிப்பிடுகையில்,

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்ற ஆனந்தசங்கரி அவர்களுடைய புதிய கூட்டமைப்பு வவுனியாவில் பல துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு இருந்தது.

அந்த துண்டுப் பிரசுரத்தில் அவர்கள் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றார்கள்.

“புதிய தலைமை அல்லது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்” என்பது ஒன்று. இரண்டாவது “இடைக்கால அறிக்கையை நிராகரிப்பதற்கு வாக்களிப்போம்.”

இது இரண்டையும் கருப்பொருளாக கொண்டு துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு உள்ளனர்.

ஆனால் ஏனோ தெரியவில்லை இந்தக் கட்சிக்காரர்கள் தங்களுடைய கட்சியின் பொதுச் செயலாளரின் படத்தைக் கூட போடுவதற்கு திராணியற்றவர்கள்.

ஆனந்த சங்கரி ஐயாவின் படத்தைப் போட்டால் தாங்கள் தோற்றுப் போய்விடுவோம் என யோசிக்கிறார்கள்.

தங்களுடைய கட்சியின் தலைமையிலேயே நம்பிக்கையில்லாதவர்கள் அல்லது தங்களது கட்சியின் தலைவரின் படத்தை போட்டால் தோற்று விடுவோம் என்று பயப்படுபவர்கள் தலைமை மாற்றத்தைப் பற்றி பேசுகிறார்கள்.

முதலில் உங்கள் தலைவர் யார் என்பதை படத்தில் போட்டுக் காட்டுங்கள். நாங்கள் எங்களுடைய கட்சியின் பெரும் தலைவராக இருந்த தந்தை செல்வா, கூட்டமைப்பின் தலைவராகவுள்ள சம்மந்தன் ஐயா, இன்னும் சிலர் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோரின் படங்களை போட்டுள்ளோம்.

ஏன் உங்களுக்கு அந்த துணிவு இல்லை என வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழ் சினிமாவில் என் வேலைகளில் மூக்கை நுழைக்காத ஒரே நடிகர் அஜித் – கே.எஸ்.ரவிக்குமார்…!!
Next post விஜய் சேதுபதிக்கு முக்கியத்தும் கொடுக்கும் மணிரத்னம்…!!