பேநசீர் படுகொலையால் எல்லாமே மாறிவிட்டது: முஷாரப் வேதனை

Read Time:1 Minute, 27 Second

பேநசீர் புட்டோ படுகொலையால் எல்லாமே தலைகீழாக மாறி விட்டது என்று பாகிஸ்தான் அதிபர் முஷாரப் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியது: பாதுகாப்பு, வெளியுறவு விவகாரங்களை நானும், உள்நாட்டு நிர்வாகத்தை பேநசீரும் கவனித்துக் கொள்வதாக திட்டமிட்டிருந்தோம். பேநசீர் படுகொலையால் அந்த திட்டங்கள் தவிடுபொடியாகி விட்டன. நான் ஜனநாயகவாதி. நவாஸ் ஷரீப் அல்லது வேறு யாரையாவது மக்கள் தேர்ந்தெடுத்தால் அதை நான் தடுக்க மாட்டேன். எக்காரணம் கொண்டும் பாகிஸ்தானை விட்டு வெளியேற மாட்டேன். கோல்ப், புத்தகங்கள் வாசிப்பதில் நேரத்தை செலவிடுவேன். புதிதாக புத்தகங்கள் எழுதுவது குறித்தும் திட்டமிட்டு வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். முஷாரபை பதவி விலகச் செய்ய ஆளும் கூட்டணி அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதலமைச்சர் வேட்பாளர்களை நேற்று வெளியிட்டுள்ளது ஜே.வி.பி
Next post செங்கலடி பிரதேசத்தில் ஈ.பி.டி.பியை வெளியேறுமாறு ஆர்ப்பாட்டம்