இளம் பெண்கள் பல முறை உச்சம் அடைய முடியுமா?..!!

Read Time:5 Minute, 23 Second

கண்டிப்பாக முடியும். ஆண்கள் உச்சம் அடைந்து விந்து வெளியேறியதும் உடனடியாக ரிலாக்ஸ் ஆகிவிடுகிறார்கள். ஆனால் பெண்கள் உச்சம் அடைந்ததும் அதே நிலையில் சில நிமிடங்கள் வரை நீடிக்கிறார்கள். அதனால் மீண்டும் அவர்கள் கிளர்ச்சி அடையும் போது அல்லது தூண்டப்படும் போது மீண்டும் உச்சம் அடைதல் சாத்தியமாகிறது. ஆண்கள் சரியான முறையில் ஒத்துழைப்பு கொடுக்கும் பட்சத்தில் மூன்று முதல் நான்கு முறை உச்சகட்டம் அடைய முடியும். எல்லா பெண்களும் உச்சகட்டம் அடைய முடியுமா? கண்டிப்பாக செக்ஸ் உணர்வு உள்ள ஒவ்வொரு பெண்ணும் உச்சகட்டம் அடைய முடியும்.

அதற்கு முதல் தேவை அவர்கள் மனநிலை சிறந்த நிலையில் ஒத்துழைக்க வேண்டும். செக்ஸில் ஈடுப்படும் நேரத்தில் முழு மனதும் இன்பத்தில் மட்டுமே இருக்க வேண்டும் தவிர மனத்தில் தேவையில்லாத பிற விஷியங்கள் இருக்கக் கூடாது. அதனால் அதிகமான பெண்கள் தனிமையில் சுய இன்பம் காணும் போது எளிதாக உச்சகட்டம் அடைவதாகச் சொல்கிறார்கள். தம்பதிகள் உறவுகொள்ளும் போது எப்படிப்பட்ட முறையில் உறவுகொள்வது பிடித்திருக்கிறதோ அதைச் செய்யச் சொல்வதன் மூலம் உச்சகட்டத்தை எளிதில் பெற முடியும்.

ஒருநாளில் எத்தனை முறை உறவுகளில் ஈடுபடும் மனநிலையும் வாய்ப்பும் இருக்கிறதோ அத்தனை முறை உச்சகட்டம் அடைய முடியும். ஒருமுறை உச்சகட்ட திருப்தி நிலை அடைந்ததே நீண்ட நேர நிம்மதி தருவதாகப் பெண்கள் சொல்கிறார்கள். பெண்கள் உடல்நிலை எத்தனை முறை உறவு கொள்வதற்கும் ஏற்றதாகவே இருப்பதால், ஆண்களுக்கு விருப்பம் இருக்கும் வரை உறவு கொள்ளலாம்.

உடலுக்குள் ஒளிந்திருக்கும் இன்பத்தை அனுபவிக்க மட்டுமல்ல, மனித விடுதலைக்கும், தம்பதியர் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதற்கும் உச்சகட்டம் வழிவகுக்கிறது. உச்சகட்டத்தை அடைந்த தம்பதியினர் எவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடுவதில்லை. அதனால், சிற்றின்பம் என்ற காமத்தில், காதல் என்பதைக் கலந்து பேரின்பம் என்ற உச்சகட்டத்தை அடைவதே ஒவ்வொரு மனிதனின் வாழ்வுக்கும் இன்பம் விளைவிக்கக் கூடியதாகும். உச்சகட்டத்தை அடையாத ஆண், பெண்களை வாழ்வில் முழுமையானவர்களாகக் கருத முடியாது என்பதற்குக் கீழ்க்கண்ட சம்பவமே ஒரு எடுத்துக்காட்டு.

பன்னாட்டு நிறுவனத்தில் உயர் பதவியில் வகிக்கும் பெண், அலுவலகத்தில் மிகச் சிறப்பாகப் பணிபுரிந்து நல்ல பெயரை வாங்கினார். ஆனால் வீட்டுக்கு வந்ததும் சிடிசிடுவென பேசுவது, குழந்தைகளை அடிப்பது, மற்றவர்களிடம் எரிச்சல் காட்டுவது, கோபப்படுவது, எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செயல்படுவது என்று தன்னைத்தானே துன்புறுத்திக்கொண்டார். நிலைமை தலைக்கு மேலே செல்லவே, வேறு வழியின்றி மருத்துவரைச் சந்திக்கச் சென்றார்.

அவரை ஆய்வு செய்த மருத்துவர் உடல் நலம், மனநலம் போன்றவை நன்றாக இருந்தாலும், அவருக்குப் பாலியல் வெளிப்பாடு ஒடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆம் ஆசைபட்டப்படி எல்லாம் அவரால் கணவருடன் இன்பம் அனுபவிக்க முடியவில்லை. அடக்கப்பட்ட பாலுந்த ஆற்றல் (libidonal energy) காரணமாகவே மனதில் சிக்கல் ஏற்பட்டு அவள் அப்படி நடந்து கொண்டது கண்டறியப்பட்டது.

அந்த பெண் அதிகாரி படித்தவராக இருந்தாலும், கலவியில் உச்சகட்டம் என்ற ஒன்று உண்டு என்று தெரிந்தாலும் அதை எப்படி பெறுவது என்று தெரியாமல் அதனை ஆசைகளையும் மனத்தில் பூட்டிவைத்த காரணத்தாலே இந்த நிலைக்கு ஆளாகியிருக்கிறார். அவர் மட்டுமல்ல, நம் இந்தியப் பெண்களில் சுமார் 80% மேற்பட்ட பெண்கள், உச்சகட்டம் என்றால் என்னவென்றே தெரியாமல் கலவி இன்பம் அனுபவிக்கிறார்கள் என்பது தான் கொடுமையாகும். இனியும் தொடரலாமா இந்த நிலைமை?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழ்ச் சமூகத்தால் எங்களுக்கு பெருமை: பிரிட்டன் பிரதமர் தெரேசா மே பொங்கல் வாழ்த்து…!!
Next post சருமத்தின் அழகை பாதுகாக்கும் உணவுகள்..!!