ஐ.தே.க உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துடன் இணைவர் -அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா
Read Time:1 Minute, 11 Second
ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் மேலும் சிலர் அரசாங்கத்துடன் இணைந்துக்கொள்ளவுள்ளனர் என ஊடக அமைச்சர் அநுரபிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தள்ளார் அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு கைகொடுப்பதற்கும் அபிவிருத்தி திட்ங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவும் இவர்கள் தமது அரசாங்கத்துடன் இணைந்துக் கொள்ள தீர்மானித்துள்ளனர் என அவர் கூறினார் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் அரசாங்கத்தில் இணைந்துக் கொள்வர் எனவும் அமைச்சர் பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
Average Rating