களுபோவிலவில் அதிசக்தி வாய்ந்த போதை மருந்து விநியோகம் செய்தவர்கள் கைது
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களை சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தும் போது வழங்கப்படும் அதிசக்தி வாய்ந்த மருந்தை சாதாரண மக்களுக்கு விநியோகம் செய்து வந்த கும்பலொன்றை கலால் திணைக்களத்தினர் களுபோவிலவிலுள்ள வீடொன்றை முற்றுகையிட்ட கலால் திணைக்களத்தினர் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான போதைப் பொருட்களையும் மீட்டுள்ளனர் இந்த போதைப்பொருள் விற்பனைத் தொடர்பில் தகவல் கிடைத்ததன் பின்னர் வாடிக்கையாளர்களை போல் அவற்றை வாங்கச் சென்ற அதிகாரிகள் விற்பனையில் ஈடுப்பட்டிருந்தவர்களை கைது செய்தனர் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் இந்திய பிரஜையென விசாரணைகளில் தெரிய வந்துள்ளது ஊசிமூலம் உடலில் ஏற்றப்படும் இது ஹெரோயினை விட சக்தி வாய்ந்தது என கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கலால் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Average Rating