இலஞ்சம் பெற்ற அம்பாந்தோட்டை பனை அபிவிருத்தி சபை ஒருங்கிணைப்பாளர் கைது
7500 ரூபாவை இல்ஞ்சமாக பெற்ற அம்பாந்தோட்டை பனை அபிவிருத்தி சபையின் ஒருங்கிணைப்பாளரை இல்ஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் நேற்று கைது செய்துள்ளனர் நாள் சம்பளத்திற்காக தொழில் புரியும் ஊழியருக்கு 15நாட்களுக்கான சம்பளத்தை மாத்திரம் வழங்கி விட்டு தொழிலாளருக்கு 28நாட்களுக்கான சம்பளத்தை வழங்கியதாக கணக்குப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார் அந்த அதிகாரி;. மிகுதி 13 நாட்களுக்கான சம்பளத்தை அவர் எடுத்துள்ளார். இதனை அவதானித்த தொழிலாளியொருவர் இனிமேல் பணத்தை கையில் வழங்காது வங்கியில் வைப்புச் செய்யுமாறு கூறியுள்ளார் அதற்கு அவ்வதிகாரி வங்கியில் பணத்தை வைப்புச் செய்து விட்டு 15நாட்களுக்கான சம்பளப் பணத்தை எடுத்துவிட்டு மிகுதி 13 நாட்களுக்காக சம்பளத்தை தன்னிடம் மீள தரும்படி கூறவே அவருடைய தொழில் தரத்திலிருந்து குறைப்பதாக கூறியுள்ளார் அதனை விரும்பாத தொழிலாளி அவர் கேட்ட மிகுதி பணத்தை கொடுக்கும் போது இலஞ்சஊழல் ஆணைக்குழுவினர் அவரை கைது செய்துள்ளனர் அந்த தொழிலாளியிடமிருந்து 7500 ரூபாவை இவர் இலஞ்சமாக பெற்றுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது நேற்று இவர் அம்பாந்தோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
Average Rating