பரிசு பொருட்களை ஏலம்விட சமந்தா முடிவு!!
Read Time:1 Minute, 10 Second
நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யா திருமணம் கடந்த ஆண்டு நடந்தது. அவர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள், திரையுலகினர் நிறைய பரிசு பொருட்கள் அளித்தனர். அதில் விலை உயர்ந்த பொருட்களும் அடங்கும். இந்த பொருட்களை ஏலம் விட்டு அதில் வரும் பணத்தை ஆதரவற்ற ஏழை எளியவர்கள், மாணவர்கள், குழந்தைகளுக்கு உதவு முடிவு செய்திருக்கிறார். தனது முடிவை கணவர் சைதன்யாவிடம் சமந்தா கூறியபோது மறுப்பேதும் சொல்லாமல் கிரீன் சிக்னல் கொடுத்து விட்டார்.
அதேபோல் மாமனார் நாகார்ஜூனா, சின்ன மாமியார் அமலா ஆகியோரிடம் இதுபற்றி தெரிவித்தபோது அவர்களும் உன் இஷ்டம் என்று சம்மதம் தெரிவித்துவிட்டனர். பரிசு பொருட்களை ஏலம் விடுவது எப்போது? எந்த இடத்தில் ஏலத்தை நடத்துவது? என்பதுபற்றி விரைவில் தெரிவிக்க உள்ளார் சமந்தா.
Average Rating