தாயையும் பெறாமகளையும் கோடாரியால் வெட்டிவிட்டு தானும் தற்கொலை; யாழில் பதற வைக்கும் சம்பவம்!!

Read Time:2 Minute, 7 Second

வண்ணார் பண்ணை வட மேற்கு பத்திரகாளி அம்மன் கோவில் வீதியில் உள்ள வீடொன்றில் தாயையும், பெறாமகளையும் வெட்டிவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,

இன்று காலை குறித்த தாயும் அவருடைய இளைய மகனுடைய மகளும் வீட்டில் இருந்துள்ளனர்.

அப்போது அவருடைய மூத்த மகன் ஈஸ்வர் என்பவர் வீட்டில் இருந்த தாய் மற்றும் இளைய மகனுடைய மகள் மீதும் கொடூரமாக கோடாரியால் வெட்டி தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

சம்பவ இடத்திலேயே இளைய மகனுடைய மகள் உயிரிழந்துள்ளதுடன், படுகாயமடைந்துள்ள தாய் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக எமது செய்தியாளர் கூறினார்.

தாக்குதலை மேற்கொண்ட நபர் நஞ்சை உட்கொண்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

03 வயதுடைய தனுசன் நிக்சையா மற்றும் 33 வயதுடைய ஈஸ்வர் ஆகியோரே இந்த சம்பவத்தில் உயிரிழந்ததுடன் பலமேஷ்வரி (55) என்ற தாய் படுகாயமடைந்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற வீட்டில் தற்போது பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலிப்பதற்கு முன்னால் இத செய்திருக்கிறீர்களா?
Next post டீடீ விவாகரத்துக்கு இதுதான் காரணமாம்!!