பாகிஸ்தானில் அமெரிக்கர் கடத்தல்
Read Time:1 Minute, 16 Second
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனை சேர்ந்த 2 பேரை தீவிரவாதிகள் கடத்தியுள்ளதாக செய்தி வெளியாகிவுள்ளது. இவர்கள் பணத்திற்காக கடத்தப்பட்டிருக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, சிந்து மாகாணத்தில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு போதிய பாதுகாப்பு அளிக்கும் படியும், குறிப்பாக, பிரிட்டன் மற்றும் அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்தும் படியும் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் சிந்து மாகாண அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது. இதனிடையே, தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக நம்பப்படும் வெளிநாட்டவர்கள், ஆப்கன் எல்லையை ஓட்டியுள்ள பழங்குடியினப் பகுதியில் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளதாக தனியார் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Average Rating