கிளிநொச்சியில் இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயற்சி!!
Read Time:55 Second
கிளிநொச்சி – பூநகரிப் பகுதியில் உள்ள 66வது படைத் தலைமையகத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இன்று காலை அவரது கைவசம் இருந்த ரி 56 ரக துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்ய முற்பட்ட வேளை, சன்னம் அவரது இடக்காலில் பட்டு காயம் அடைந்த நிலையில், சக இராணுவ வீரர்களினால் கிளிநொச்சி வைத்தியசாலையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கிளிநொச்சி இராணுவத் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Average Rating