சு.க., ஐ.தே.க. பிரதிநிதிகள் முதற்கட்ட பேச்சில் இணக்கம்
Read Time:1 Minute, 20 Second
பொது இணக்கப்பாட்டின்கீழ் பொது தேசிய வேலைத்திட்டமொன்றை தயாரிப்பதன் மூலமாகவே புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வைக்காண முடியும் என்று சிறீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் சுட்டிக்காட்டியுள்ளன.
பொது தேசிய வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படாத வரை இனப்பிரச்சினை உள்ளிட்ட இதர பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றக்கொடுக்கவே முடியாது என்றும் இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அரசாங்கத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து, செயற்படுவது தொடர்பாக சுதந்திரக்கட்சி மற்றும் ஐ.தே.க. வினருக்கு இடையில் நேற்று பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் முதற்கட்டப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
இந்த பேச்சுவார்த்தையின்போதே இருகட்சிகளின் பிரதிநிதிகளும் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.