தக்காளிச் செடிகளுக்குள் கஞ்சா செடி வளர்த்தவர் விளக்கமறியலில்!!

Read Time:1 Minute, 21 Second

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தக்காளிச் செடிக்குள் ஐந்து கஞ்சா செடிகளை வளர்த்து வந்த நபர் ஒருவரை இம்மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் நேற்று (22) உத்தரவிட்டார்.

வெருகல், மாவடிச்சேனை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் வீட்டில் மறைமுகமாக தக்காளிச் செடிக்குள் ஐந்து கஞ்சா செடிகளை வளர்த்து வந்ததாக சேருநுவர போதைப் பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேக நபரை பொலிஸார் மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலரை மணந்தார் பாவனா! (திருமணம்)
Next post வெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்…!!