கடற்பரப்பில் மீதந்து வந்த கேரள கஞ்சா!!
Read Time:1 Minute, 17 Second
இலங்கை கடற்பரப்பில் நேற்று (23) இரவு 08 மணியளவில் 186 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ் பிராந்திய கடற்படையின் உதவிப்பணிப்பாளர் ஆர். ஐயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
19 இலட்சம் ரூபா பெறுமதியுடைய குறித்த கேரள கஞ்சா பொதிகள் காங்கேசன்துறை கடற்பரப்பில் மீதந்து வந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பாக ஒருவர் சந்தேகத்திற்குரிய இடத்தில் நின்றபோது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணையினை கடற்படையினர் மேற்கொள்ளுவதுடன் இன்று (24) காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் குறித்த நபர், மற்றும் கஞ்சா பொதிகள் தொடர்பாக ஆராய நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.
Average Rating