யாழில் இரண்டு வேட்பாளர்கள் மீது தாக்குதல்!!

Read Time:2 Minute, 12 Second

தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்றிரவு தாக்குதல் நடத்தியுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அக் கட்சியின் சாவகச்சேரி பிரதேச சபை மற்றும் நகர சபைக்கு போட்டியிடும் இரு வேட்பாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களுமே தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்த மேலும் தெரிய வருவதாவது,

தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் சாவகச்சேரியில் நேற்றிரவு பிரச்சாரப் பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு மோட்டார் சைக்கில் மற்றும் மகேந்திரா ஜிப் வண்டி ஆகிய வாகனங்களில் வந்தவர்கள் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன் போது அங்கு நின்றிருந்த வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என மூவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.மேலும் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு துரத்தியதாகவும் இதனால் அனைவரும் வேறு வேறு திசைகள் நோக்கி ஓடிச் சென்றதாகவும் வேட்பாளர் குமாரவேல் தெரிவித்துள்ளார்.

இதனால் அச்சம் காரணமாக தான் வேறு ஒரு நண்பரின் வீட்டிலேயே இரவு முழுவதும் தங்கியிருந்ததாகவும் இன்று காலை சாவகச்சேரி பொலிஸார் வந்து தன்னை மீட்டுக் கொண்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றையும் தான் பதிவு செய்துள்ளதாகவும் குமாரவேல் மேலும் குறிப்பிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டிரம்புக்கு தங்கக் கழிவறை தர விரும்பும் அருங்காட்சியகம்!!
Next post பூனையின் புகைப்பட வழக்கில் 4 கோடி சம்பாதித்த பெண்!!