2 கோடி பெறுமதியான போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது!!
Read Time:45 Second
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஒருதொகைப் போதைப் மருந்துகளுடன் பெண் ஒருவர் பொலிஸ் போதை தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நைஜீரிய நாட்டுப் பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்தப் பெண்ணிடம் இருந்து 2 கிலோகிராம் நிறையுடைய போதை மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி 20 மில்லியன் ரூபா என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
Average Rating