மாமியாரை தடியால் அடித்து கொலை செய்த மருமகன்!!
Read Time:1 Minute, 18 Second
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலபிட்டி நவ திஸ்பன கிராம பகுதியில் மாமியாரை தடியால் அடித்து மருமகன் கொலை செய்துள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்த பெண்மணி 65 வயதான அனுலாவத்தி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று (30) மாலை 6 மணியளவில் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மருமகன், மாமியாரை மண்வெட்டி கணையினால் தாக்கியுள்ளார்.
தாக்குதலில் பலத்த காயமடைந்த மாமியார் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் சிகிச்சை பலனின்றி (31) உயிரிழந்துள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய மருமகனை கைது செய்ய நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating