முன்மாதிரி பெண் டிஎஸ்பி ‘வழிதவறியதால்’தற்கொலைக்கு முடிவு செய்த ஆந்திர வாலிபர்!!

Read Time:3 Minute, 43 Second

தெலங்கானாவில் பெண் ஏஎஸ்பியை ரோல்மாடலாக நினைத்தவர் அவரது கள்ளத்தொடர்பு விவகாரத்தால் தொலைக்காட்சி, பத்திரிகைகளுக்கு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கடிதம் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானா மாநிலம், லஞ்ச ஒழிப்புத்துறையில் ஏஎஸ்பியாக பணிபுரிந்து வந்த சுனிதாரெட்டிக்கும், ஐதராபாத் கல்வகுருத்தி காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த மல்லிகார்ஜுனாரெட்டிக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாம்.

இந்நிலையில், கடந்த மாதம் 21ம் தேதி மாதாபூரில் உள்ள வீட்டில் சுனிதாரெட்டியும், மல்லிகார்ஜுனாரெட்டியும் இருப்பதை அறிந்த சுனிதாரெட்டியின் கணவர் அவரது உறவினர்களுடன் அங்கு சென்றார். அங்குள்ள வீட்டில் இருவரையும் கையும், களவுமாக பிடித்து நடுரோட்டுக்கு அழைத்து வந்தனர். இன்ஸ்பெக்டர் மல்லிகார்ஜுனா ரெட்டியை சுனிதாரெட்டியின் உறவினர்கள் செருப்பால் அடித்தனர். இதுகுறித்து, மாதாப்பூர் காவல் நிலையத்தில் சுனிதாரெட்டியின் கணவர் புகார் செய்தார். இன்ஸ்பெக்டரை ஏஎஸ்பியின் உறவினர்கள் செருப்பால் அடித்தது வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் அனைத்து தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தெலங்கானா மாநில காவல் துறை உயரதிகாரிகள் ஏஎஸ்பி சுனிதாரெட்டி மற்றும் இன்ஸ்பெக்டர் மல்லிகார்ஜுனாரெட்டியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில், சுனிதாரெட்டியை காவல்துறையில் ரோல்மாடலாக நினைத்துக்கொண்டிருந்த ஐதராபாத்தை சேர்ந்த வினய் என்ற வாலிபர் நேற்று அனைத்து தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளுக்கு தற்கொலை கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.அதில், `காவல்துறையில் சுனிதாரெட்டியை ரோல்மாடலாக நினைத்து வந்தேன். ஆனால் அவர் குறித்து வந்த தகவலை பார்த்து மனவேதனையில் இருந்து வருகிறேன். அப்போது முதல் உணவு சாப்பிடாமல் துக்கத்தில் இருந்து வந்தேன். இதுபோன்ற சமூகத்தில் வாழ்வதை விட தற்கொலை செய்வதே மேல் என்று தற்கொலை செய்துகொள்கிறேன்’’ ன்று தெரிவித்துள்ளார்.
தற்கொலை கடிதம் அனுப்பிய வாலிபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர், எங்கிருந்து கடிதம் அனுப்பினார் என்பது குறித்து ஐதராபாத் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொலிஸார் அதிரடி நடவடிக்கை; நேற்று இரவு நாடு முழுவதும் 1670 பேர் கைது!!
Next post மாமியாரை தடியால் அடித்து கொலை செய்த மருமகன்!!