சரித்திர கதையில் இனி நடிக்க மாட்டேன் : தீபிகா திடீர் முடிவு!!

Read Time:1 Minute, 53 Second

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன், சித்தூர் ராணி பத்மாவதியாக நடித்துள்ள படம் ‘பத்மாவத்’. இப்படம் சரித்திரத்தை தவறாக சித்தரித்து எடுத்திருப்பதாக ராஜ்புத் இனத்தை சேர்ந்த கர்னி சேனா பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தை தடுக்க பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர். அதையும் மீறி சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி பத்மாவத் படம் திரைக்கு வந்தது. தற்போது இந்தியில் இது ரூ. 100 கோடி வசூலை ஈட்டியிருக்கிறது.

உலகம் முழுவதுமாக ரூ.200 கோடி வசூல் செய்துள்ளது. இந்நிலையில் தீபிகா படுகோன் கூறும்போது,’ராணி பத்மாவதி என்றால் யார் என்றே எனக்கு தெரியாது. ஏனென்றால் நான் வரலாற்று மாணவி அல்ல. இப்படத்தின் கதையை இயக்குனர் பன்சாலியிடம் கேட்டபிறகுதான் ராணி பத்மாவதி குறித்து படித்து தெரிந்து கொண்டேன்.

அந்த கதையை படித்தபிறகு எனது எண்ணமும் செயலும் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிட்டது. அதனால்தான் என்னால் படத்தில் சரியான நடிப்பை தர முடிந்தது. இப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது குறித்து எனக்கு மகிழ்ச்சி. மீண்டும் வரலாற்று பின்னணியிலான கதாபாத்திரத்தில் நடிக்கும் எண்ணம் இல்லை. ஆனால் சினிமாவில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மணிரத்னம் படத்தில் குவியும் நட்சத்திர பட்டாளங்கள்!!
Next post புண்களை ஆற்றும் பண்ணை கீரை!!