மாஜி கவர்ச்சி நடிகைக்கு பாலியல் தொல்லை : தொழில் அதிபர் மீது போலீசில் புகார்!!
கோலிவுட்டில் சில்க் ஸ்மிதாபோல் பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக திகழ்ந்தவர் ஜீனத்அமன். தம் மேர தம், லைலா ஒ லைலா, சுராலியா ஹை தும் ஜோ தில் கோ என பல்வேறு பிரபலமான பாடல்களுக்கு கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்தவர். 85ம் ஆண்டு மஸ்ஹார் கான் என்பவரை மணந்தார். அவர்களுக்கு அசான், ஸஹான் என 2 மகன்கள் உள்ளனர். மஸ்ஹார் கடந்த 96ம் ஆண்டு இறந்து விட்டார்.
தற்போது 2 மகன்களுடன் ஜீனத் வாழ்ந்து வருகிறார். 60 வயதை கடந்துவிட்ட ஜீனத் மீது மும்பை தொழில் அதிபர் ஒருவர் இன்னமும் பழைய ஞாபகத்தில் அவருடன் பழகி வந்தார். ஜீனத்தும் தொழில் அதிபருடன் சகஜமாக பழகினார். திடீரென்று தொழில் அதிருடன் ஜீனத்துக்கு மனஸ்தாபம் ஏற்பட்டது. அவருடன் பேசுவதை நிறுத்தினார்.
ஆனால் தொழில் அதிபரோ ஜீனத்தை விடுவதாக இல்லை. அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் பின்தொடர்ந்து சென்று சமாதானப்படுத்த முயன்றார். கடுப்பான ஜீனத் இதுகுறித்து மும்பை ஜுஹு போலீசில் புகார் செய்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், நடிகைக்கு பாலியல் தொல்லை தருவதாக தொழில் அதிபர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Average Rating