பிரபாஸுக்காக பாலிவுட் ஹீரோயினுக்கு வலை வீச்சு!!
பாகுபலி படத்துக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியிடும் வகையிலேயே உருவாக்கப்படுகின்றன. தற்போது சாஹோ படத்தில் நடித்து வருகிறார். இப்படமும் 3 மொழிகளில் உருவாகிறது. இதில் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் ஜோடியாக நடிக்கிறார். பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்தை ராதாகிருஷ்ணா இயக்க உள்ளார். ஏப்ரல் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இதிலும் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகையை ஒப்பந்தம் செய்ய உள்ளனர். சமீபத்தில் தீபிகா படுகோனை மும்பையில் சந்தித்து கதை கூறினார். கதை முழுவதையும் தீபிகா கேட்டார். ஆனால் சில காட்சிகள் கழிந்தபிறகும் படத்தில் நடிப்பது பற்றி அவர் உறுதி செய்யவில்லை. இதில் ஏமாற்றம் அடைந்த இயக்குனர் அடுத்தடுத்து வேறுசில ஹீரோயின்களை சந்திக்க முயன்றார்.
இந்தி நடிகர் சயீப் அலிகான் மகள் சாரா அலிகான் தற்போது இந்தியில் ‘கேதர்நாத்’ படம் மூலம் அறிமுகமாகிறார். அவரை இயக்குனர் ராதாகிருஷ்ணா, அணுகி பிரபாஸ் ஜோடியாக நடிக்க கேட்டார். பிரபாஸ் பெயரை கேட்டதும் சாரா நடிக்க விருப்பம் தெரிவித்தார். ஆனால் ஏற்கனவே இந்தியில் நடித்து வருவதால் அப்படம் முடிந்த பிறகே இப்படத்துக்கு கால்ஷீட் தருவது பற்றி முடிவு செய்யவாராம்.
Average Rating