ஆந்திராவுக்கு விரைவில் சிறப்பு நிதி ; நாடாளுமன்றத்தில் ஜெட்லி உறுதி!!

Read Time:1 Minute, 22 Second

ஆந்திராவுக்கு சிறப்பு நிதி அளிக்கக் கோரி நாடாளுமன்றத்தில் கடந்த 2 நாட்களாக தெலுங்கு தேசம் மற்றம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் மாநிலங்களவையில் நேற்று பேசிய அருண் ஜெட்லி, ‘‘ஆந்திராவின் மறு சீரமைக்கு சிறப்பு நிதி அளிக்க மாற்று முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆந்திர நிதித்துறை செயலாளரை உடனடியாக டெல்லி அழைத்து இதற்கான நடைமுறைகளை செயல்படுத்தும்படி செலவின செயலாளரிடம் கூறியுள்ளேன். ஏற்கனவே உறுதி அளிக்கப்பட்ட தொகையில் மாற்றம் இருக்காது. இதில் எந்த பிரச்னையும் இருக்காது’’ என்றார்.

அதன்பின் மக்களவையில் பேசிய அருண் ஜெட்லி, ‘‘ஆந்திராவுக்கு வழங்க வேண்டிய நிதியை கூடுதல் பட்ஜெட் செலவின முறையில் வழங்குவதற்கான நடைமுறையை மேற்கொள்ளும்படி செலவின செயலாளரிடம் கூறியுள்ளேன்’’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி பாக். தீவிரவாதியை மீட்டு சென்ற கும்பல்!!
Next post இனிக்கும் இல்லறத்துக்கு 3 அம்சங்கள்!!