பாக். தீவிரவாத அமைப்புடன் தொடர்பு 3 பேர் சர்வதேச தீவிரவாதி அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!!
பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 3 பேரை சர்வதேச தீவிரவாதிகளாக அமெரிக்கா நேற்று அறிவித்தது.
பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் லஷ்கர் இ தய்பா, தலிபான் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்த 3 தனி நபர்களை சர்வதேச தீவிரவாதிகளாக அமெரிக்கா நேற்று அறிவித்துள்ளது.
ரஹ்மான் செப் பகிர் முகமது, ஹிஸ் உல்லா அஸ்தம் கான் மற்றும் திலாவர் கான் நதிர் கான் ஆகியோர் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அமெரிக்க தீவிரவாதம் மற்றும் நிதி நுண்ணறிவு செயலாளர் சிகல் மண்டேல்கர் கூறுகையில், “ 3 பேருக்கு விதிக்கப்பட்ட தடை அல்கய்தா, லஷ்கர் இ தய்பா, தலிபான் மற்றும் இதர தீவிரவாத குழுக்களுக்கு நிதியுதவி செய்வதை தடுக்கும் நோக்கத்தின் ஒரு பகுதியாகும். அபாயகரமான தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு அடைக்கலம் தருவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்” என்றார்.
Average Rating