6,500 அடி உயரத்தில் கண்ணாடி பாலம்!!
Read Time:57 Second
உலகிலேயே மிக உயரமான கண்ணாடி தொங்கு பாலத்தை அமைத்து தனது சொந்த சாதனையை சீனா முறியடித்திருக்கிறது. தென் மேற்கு சீனாவின் பெடாய் மலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடி பாலம், 6,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதற்கு முன் ஜியாங்ஜியாஜியில் 1,800 அடி உயரத்தில் கட்டப்பட்ட கண்ணாடி பாலமே மிக உயர்ந்த பாலமாக இருந்து வந்தது.
பெடாய் கண்ணாடி பாலம் வழியாக சியாங்கு நகரிலிருந்து வான்யுயன் நகரத்துக்கு செல்லும் வகையில், 649 அடி நீளம் கொண்டதாகும். ஒரே நேரத்தில் 80 பேர் பாலத்தில் செல்லலாம். விரைவில் இப்பாலம் திறக்கப்பட உள்ளது.
Average Rating