சீனாவில் சுரங்க விபத்து: 18 பேர் பலி

Read Time:1 Minute, 24 Second

சீனாவின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 18 ஊழியர்கள் உயிரிழந்தனர். ஷான்க்ஸி மாகாணத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் செவ்வாய்க்கிழமை இந்த விபத்து நிகழ்ந்தது. அரசுக்குச் சொந்தமான இந்த நிலக்கரிச் சுரங்கம் இடிந்து விழுந்தது. இதில் சிக்கியவர்களில் 12 பேர் மீட்கப்பட்டனர். சுரங்கத்தில் வாயுக் கசிவு ஏற்பட்டதில் 2 பேர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தனர். சுரங்கத்தில் ஒரே புகையும், கரி மாசும் சூழ்ந்துள்ளதால் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். சீனாவில் சுரங்க விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 3,800 பேர் சுரங்க விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரிட்டிஷ் மகாராணியின் அழைப்பை வில்லியமின் காதலி நிராகரிப்பு
Next post தாய்நாட்டுக்கு திரும்ப மாட்டேன் என்ற சபதத்துடன் நேபாளத்தை விட்டு வெளியேறினார் முன்னாள் இளவரசர்