விஷேட அதிரடிப் படையினரின் சுற்றிவளைப்பில் ஹெரோய்ன் வர்த்தகர் கைது!!
Read Time:51 Second
கடவத்தை, கோணஹேன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோய்ன் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் தலைமை முகாமின் செயற்பாட்டு அதிகாரிகள் குழுவால் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.
1380 மில்லிகிராம் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கடவத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Average Rating