இலங்கை – இந்திய அணிகள் இன்று மோதுகின்றன!
ஆசிய கிண்ணத்துக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இலங்கை – இந்திய அணிகள் மோதவுள்ளன. பகல் இரவு ஆட்டமாக நடைபெறவுள்ள இன்றைய போட்டி பாகிஸ்தான் கராச்சியிலுள்ள தேசிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. தொடரின் ‘சுப்பர் 4″ சுற்றில் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் இன்று களமிறங்குகிறது. இலங்கைக்கு இன்றைய போட்டி அவ்வளவு முக்கியமில்லாது போனாலும் இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இறுதிச் சுற்றில் நுழைவதற்கு இந்தியா இப்போட்டியில் கட்டாயம் வெற்றிபெற்றேயாகவேண்டும். நேற்று இடம்பெற்ற இந்திய – பாகிஸ்தான் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றிருந்தால் இந்தியாவுக்கு இன்றைய போட்டி சவால் மிக்கதாக இருந்திருக்காது. இலங்கையைப் பொறுத்தவரையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் தொடரின் இறுதிப் போட்டியில் சிறப்பாகப் பிரகாசிப்பதற்கான மனவலிமையைப் பெற்றுக்கொள்ளும். இதேவேளை, ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் ~சுப்பர் 4| சுற்றில் பாகிஸ்தன் – இந்திய அணிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் 8 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது. இந்த வெற்றி இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பைப் பாகிஸ்தான் அணிக்கு அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating