இலஞ்சம் பெற்ற வனவள அதிகாரி கைது
Read Time:1 Minute, 12 Second
பதினையாயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற வனவள அதிகாரியை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் நேற்றுமுன்தினம் கைதுசெய்துள்ளனர் மெதகம பிபில ஆகிய பகுதியைச் சேர்ந்த மரவேலை ஒருவரிடமிருந்தே இவர் இலஞ்சம் பெற்றுள்ளார். இவரால் செய்யப்பட்ட மரதளபாடங்களை பிபிலேயிலிருந்து கொண்டு செல்வதற்கான அனுமதிப் பத்திரத்தை பொறுப்பேற்றுக் கொடுப்பதற்காகவே இவர் லஞ்சம் கேட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் குற்றப்புலனாய்வு பிரிவுக்கான பணிப்பாளர் நெவில் குருகே தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் வீட்டில் வைத்து இவர் இலஞ்சம் பெறுகையில் இவரை ஆணைக்குழு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர் நேற்று இவர் பிபில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் என்று மேலும் தெரிவிக்கப்படுகிறது.
Average Rating