புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு – இருவர் பலி!!
Read Time:1 Minute, 9 Second
கொழும்பு – புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய நபரொருவரே இவ்வாறு துப்பாக்கிப்பிரயோகத்திற்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்ட சந்தேக நபர் பிரதேசவாசிகளால் தாக்கப்பட்டுள்ள படுகாயமடைந்த நிலையில் சந்தேகநபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Average Rating